2023 -ல் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டத்தில் 3,00,232 லட்சம் இலவசமாக பெறலாம்..!

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுக்காப்பு திட்டம் - 2023 Muthalvarin Pen Kulanthai Pathukappu Thittam பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 1992- ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு தொகைகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் வழங்கப்படும் தொகையினை பெண்குழந்தைகள் 18 வயது நிரம்பியதும் பெற்றுக்கொள்ளலாம். எனவே பெண் குழந்தைகள் உள்ளவர்கள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள், விதிமுறைகள் இருக்கிறது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: இரண்டு வகையான திட்டங்கள்: திட்டம்: 1 உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கவே கூடாது. அப்படி உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் வைப்பு தொகையாக ரூ. 50,000/- பவர...